ADDED : செப் 24, 2024 07:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெத்தநாயக்கன்பாளையம்: இரண்டு இடங்களில், புதிதாக கட்டப்பட்ட நிழற்கூடங்களை, ஆத்துார் அ.தி.மு.க., எம்.எல்.ஏ., திறந்து வைத்தார்.
பெத்தநாயக்கன்பாளையம் அருகே, பனைமடல் ஊராட்சி, அண்ணா நகர் மற்றும் இடையப்பட்டி ஆகிய இரண்டு இடங்-களில், புதிதாக நிழற்கூடம் அமைப்பதற்கு ஆத்துார் எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதி தலா, 9.98 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
நிழற்கூடம் பணிகள் முடிந்த நிலையில் நேற்று இரு நிழற்கூ-டங்களை ஆத்துார் எம்.எல்.ஏ., ஜெயசங்கரன் திறந்து வைத்தார். ஒன்றிய குழு தலைவர் சின்னதம்பி, பெத்தநாயக்கன்பாளையம் வடக்கு ஒன்றிய
செயலர் மோகன் உள்பட பலர் கலந்து கொண்-டனர்.

