/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஒரே குடும்பத்தில் ஐவர் தீக்குளிக்க முயற்சி
/
ஒரே குடும்பத்தில் ஐவர் தீக்குளிக்க முயற்சி
ADDED : டிச 10, 2024 07:59 AM
சேலம்: சேலம் மாவட்டம், ஓமலுார் அடுத்த கோல்காரனுார், பச்சனம்-பட்டியை சேர்ந்தவர் சுரேஷ், 35. இவர், தன் மனைவி மற்றும் மூன்று குழந்தைகளுடன், நேற்று சேலம் கலெக்டர் அலுவல-கத்தில் மனு கொடுக்க வந்து, திடீரென மண்ணெண்ணையை ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றனர். போலீசார், ஐவரையும் தடுத்து மீட்டு முதலுதவி அளித்தனர்.அதன்பின் சுரேஷ் கூறியதாவது:
என் தந்தை வடிவேலுக்கு, 20 ஆண்டுகளுக்கு முன், 900 சதுர-டியில் தொகுப்பு வீடு,
வருவாய்த்துறையால் வழங்கப்பட்டது. தற்-போது என் பெரியப்பா மகன்கள், அந்த வீட்டை அபகரிக்க
திட்ட-மிட்டு, எங்களை விரட்டுகின்றனர். அதை விட்டால், எங்களுக்கு வேறு வீடு, சொத்து எதுவும்
இல்லை. எனவே, வீட்டை அபக-ரிக்க முயல்வோர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, குடும்பத்-துடன்
தீக்குளிக்க முயன்றோம்.இவ்வாறு கூறினார்.அதன்பின், கலெக்டர் அலுவலகத்தில் சுரேஷ் மனு அளித்தார்.

