/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
4 பேர் பலியான வழக்கு ஆஜராகாத டிரைவருக்கு 'காப்பு'
/
4 பேர் பலியான வழக்கு ஆஜராகாத டிரைவருக்கு 'காப்பு'
ADDED : ஆக 28, 2025 01:24 AM
கெங்கவல்லி, கெங்கவல்லி, இந்திரா நகரை சேர்ந்தவர் செல்வா, 29. டிரைவராக பணியாற்றிய இவர், தற்போது பெயின்டராக பணிபுரிகிறார். 2017 மே, 17ல், கெங்கவல்லி வழியே மினி சரக்கு வேனை ஓட்டிச்சென்றபோது விபத்து ஏற்பட்டது.
இதில் அந்த வேன் கவிழ்ந்ததில், 4 பேர் உயிரிழந்தனர். இதுகுறித்து கெங்கவல்லி போலீசார் வழக்குப்பதிந்து, ஆத்துார் இரண்டாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் விசாரணை நடக்கிறது. ஆனால் இந்த வழக்கில், ஒரு மாதமாக, செல்வா, நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகவில்லை. கடந்த, 20ல், செல்வாவுக்கு, பிடிவாரன்ட் பிறப்பித்து, நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் நேற்று, கெங்கவல்லியில் இருந்த செல்வாவை, போலீசார் கைது செய்தனர்.

