/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மயக்கம் அடைந்த டிரைவர் சாலை தடுப்பில் மோதிய பஸ்
/
மயக்கம் அடைந்த டிரைவர் சாலை தடுப்பில் மோதிய பஸ்
ADDED : மே 15, 2024 11:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சங்ககிரி: ஈரோடு, பெரியசோமூர், பெரியத்தாள் கோவில் வீதியை சேர்ந்த, அரசு பஸ் டிரைவர் சண்முகராஜா, 39. நேற்று காலை, ஈரோட்டில் இருந்து சேலத்துக்கு பஸ்சை ஓட்டி வந்தார். 22 பயணியர் இருந்தனர். காலை, 8:00 மணிக்கு சங்ககிரி, வி.என்.பாளையத்தில் வந்தபோது, டிரைவருக்கு மயக்கம் ஏற்பட்டது.
அவரது கட்டுப்பாட்டை இழந்த பஸ், சாலை நடுவே உள்ள தடுப்பில் மோதி நின்றது. இதில் பஸ்சின் முன்பகுதி சேதம் அடைந்தது. 22 பயணியர் காயமின்றி தப்பினர். சண்முகராஜா, சங்ககிரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சங்ககிரி போலீசார்

