ADDED : ஏப் 10, 2025 02:18 AM
அ நிறம் | அளவு
நீர்மோர் பந்தல்அ.தி.மு.க., திறப்பு
சேலம்:அ.தி.மு.க.,வின், சேலம் மாநகர் மாவட்டம் கொண்டலாம்பட்டி பகுதி, அம்மாபேட்டை பகுதி சார்பில், சீலநாயக்கன்பட்டி, அம்மாபேட்டை பகுதிகளில் நீர்மோர் பந்தல் நேற்று திறக்கப்பட்டது. அமைப்பு செயலர் சிங்காரம் திறந்து வைத்து, மக்களுக்கு நீர்மோர், கம்மங்கூழ், இளநீர், வெள்ளரிப்பழம், தர்பூசணி உள்ளிட்டவற்றை வழங்கினார். மாநகர பொறுப்பாளர்கள் செல்வராஜ், பாலு, பொருளாளர் வெங்கடாசலம், அவைத்தலைவர் பன்னீர்செல்வம் உள்பட பலர் பங்கேற்றனர்.
