ADDED : ஏப் 10, 2025 01:57 AM
அ நிறம் | அளவு
விவசாயிகளுக்குகோழி வளர்ப்பு பயிற்சி
வீரபாண்டி:வீரபாண்டி வட்டார விவசாயிகளுக்கு கோழி வளர்ப்பு குறித்த பண்ணைப்பள்ளி பயிற்சி, இரு மாதங்களாக, உத்தமசோழபுரம் கால்நடை மருத்துவமனையில் நடந்தது. அதன் இறுதி வகுப்பு நேற்று நடந்தது. வீரபாண்டி வேளாண் உதவி இயக்குனர் கார்த்திகாயினி தலைமை வகித்து, பயனாளிகளுக்கு கோழிக்குஞ்சுகள், பயிற்சி கிட் பேக், தொழில்நுட்ப கையேடு ஆகியவற்றை வழங்கி, வேளாண் துறை மானிய திட்டங்கள் குறித்து பேசினர்.
வட்டார தொழில்நுட்ப மேலாளர் ராஜேந்திரன், பயிற்சியின் நோக்கம் குறித்து விளக்கினார். கால்நடை உதவி மருத்துவர் ரமேஷ் லாபகர கோழி வளர்ப்பில் சந்தை வாய்ப்பு, வருமானம் குறித்து விளக்கம் அளித்தார். துணை வேளாண் அலுவலர் கிருஷ்ணமூர்த்தி, கால்நடை உதவி மருத்துவர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.
