sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

அரசு பள்ளிகளில் மேலாண் குழு தேர்வு

/

அரசு பள்ளிகளில் மேலாண் குழு தேர்வு

அரசு பள்ளிகளில் மேலாண் குழு தேர்வு

அரசு பள்ளிகளில் மேலாண் குழு தேர்வு


ADDED : ஆக 25, 2024 07:02 AM

Google News

ADDED : ஆக 25, 2024 07:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வீரபாண்டி: பள்ளிகளில் கட்டாய கல்வி உரிமை சட்டத்தில், 2020 முதல், பள்ளி மேலாண் குழு அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. அக்குழுவில் தலைவர், துணை தலைவர், தலைமையாசிரியர், ஆசிரிய பிரதிநிதி, மாணவர்களின் பெற்றோர், முன்னாள் மாண-வர்களின் பெற்றோர் பிரதிநிதிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், தன்-னார்வலர், முன்னாள் மாணவர் உள்பட, 24 உறுப்பினர்கள் இருப்பர். இவர்களில், 75 சதவீதம், மாணவர்களின் பெற்றோராக இருக்க வேண்டும்.

அவர்களில், 50 சதவீத பெண்கள் இடம்பெற வேண்டும். அனைத்து சமுதாயத்தினரின் பங்களிப்பு இருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி தமிழகம் முழுதும் அரசு பள்-ளிகளில் பள்ளி மேலாண் குழு அறிமுக கூட்டம் கடந்த, 2ல் நடந்தது. நேற்று குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டு பொறுப்பேற்றுக்கொண்டனர்.

சேலம் மாவட்டம் வீரபாண்டி அரசு மேல்நிலைப்பள்ளி மேலாண் குழு தலைவியாக பத்மா, துணை தலைவியாக தேவகி, தலை-மையாசிரியர் இளங்கோவன் உள்ளிட்ட புதிய உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இக்குழு மாதந்தோறும் கூடி பள்ளி வளர்ச்சி, மாணவர்களின் தேவை, பாதுகாப்பு வசதி குறித்து ஆலோசித்து பரிந்துரை செய்யும். அடுத்த இரு ஆண்டுகளுக்கு புது உறுப்பினர்கள் பதவியில் இருப்பர். அதேபோல் ஆட்டை-யாம்பட்டி அரசு ஆண்கள், பெண்கள் மேல்நிலைப்பள்ளிகளில், மேலாண் குழு உறுப்பினர்கள் பொறுப்பேற்றுக்கொண்டனர்.






      Dinamalar
      Follow us