நரசிங்கபுரத்தில் பாலமுருகன்கோவில் கும்பாபிேஷக விழா
நரசிங்கபுரத்தில் பாலமுருகன்கோவில் கும்பாபிேஷக விழா
ADDED : ஏப் 08, 2025 01:48 AM
அ நிறம் | அளவு
நரசிங்கபுரத்தில் பாலமுருகன்கோவில் கும்பாபிேஷக விழா
ஆத்துார்:நரசிங்கபுரத்தில் உள்ள, பாலமுருகன் கோவிலில் கும்பாபிேஷக விழா நடந்தது.ஆத்துார் அருகே, நரசிங்கபுரம் வடக்கு தில்லை நகர் பகுதியில், புதிதாக பாலமுருகன் கோவில் கட்டப்பட்டது. விழாவையொட்டி, நேற்று முன்தினம் கணபதி ேஹாமம் நடந்தது. நேற்று, இரண்டாம் கால பூஜை நடந்தது. தொடர்ந்து, பல்வேறு புண்ணிய நதிகளில் இருந்து கொண்டு வந்த புனித நீரில், கோபுர கலசங்களுக்கு சிவாச்சாரியர்கள் புனித நீர் ஊற்றி கும்பாபிேஷகம் செய்து வைத்தனர்.
மூலவர் பாலமுருகன் அபிேஷக பூஜைக்கு பின், புஷ்ப அலங்காரத்தில் அருள்பாலித்தார். இதில், ஆத்துார், நரசிங்கபுரம் பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.
