ADDED : ஏப் 02, 2025 01:43 AM
அ நிறம் | அளவு
நைட்டியில் தீப்பற்றி பெண் உயிரிழப்பு
சேலம்,:சேலம், சின்னதிருப்பதி, அண்ணா சாலையை சேர்ந்த முருகன் மனைவி சங்குமதி, 47. சற்று மனநலம் பாதிக்கப்பட்ட இவர், கடந்த, 28ல் மெழுகுவர்த்தி ஏற்றினார். அப்போது எதிர்பாராதவிதமாக அவரது நைட்டியில் தீப்பற்றியது. அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து அணைத்தனர்.
ஆனால் படுகாயம் அடைந்த நிலையில், சங்குமதியை சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். நேற்று முன்தினம் அவர் உயிரிழந்தார். கன்னங்குறிச்சி போலீசார் விசாரிக்கின்றனர்.
