ADDED : மார் 27, 2025 01:08 AM
அ நிறம் | அளவு
'காஸ்' கசிந்து முதியவர் பலி
தலைவாசல்:தலைவாசல், வீரகனுார், கிழக்குராஜாபாளையம் ஊராட்சி நத்தக்காட்டை சேர்ந்த, கூலித்தொழிலாளி ராமசாமி, 65. இவரது மனைவி ராஜகுமாரி, கடந்த, 17ல் வீரகனுார் சென்ற நிலையில், ராமசாமி சமையல் செய்ய, 'காஸ்' சிலிண்டரை பற்ற வைத்துள்ளார். அப்போது காஸ் கசிவு ஏற்பட்டதில், ராமசாமி மீது தீ தாக்கம் ஏற்பட்டது. அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து தீயை அணைத்து, காயம் அடைந்த ராமசாமியை, சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு நேற்று அவர் உயிரிழந்தார். வீரகனுார் போலீசார் விசாரிக்கின்றனர்.
