sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 31, 2025 ,மார்கழி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

நில அளவைக்கு லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ., தலையாரி சஸ்பெண்ட்

/

நில அளவைக்கு லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ., தலையாரி சஸ்பெண்ட்

நில அளவைக்கு லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ., தலையாரி சஸ்பெண்ட்

நில அளவைக்கு லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ., தலையாரி சஸ்பெண்ட்


ADDED : மே 09, 2025 01:30 AM

Google News

ADDED : மே 09, 2025 01:30 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவாடானை: ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகாவில் நில அளவை செய்வதற்காக ரூ.3500 லஞ்சம் வாங்கி கைதான பனிச்சகுடி வி.ஏ.ஓ., நைனாமுகமது 31, தலையாரி சித்ரா 48 , 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர்.திருவாடானை தாலுகா பெருவாக்கோட்டையை சேர்ந்தவரின் நிலத்தை அளப்பதற்காக பனிச்சகுடி குரூப் வி.ஏ.ஓ., நைனாமுகமதுவை அணுகினார். அதற்கு வி.ஏ.ஓ., ரூ.4000 லஞ்சம் கேட்டார். ரூ.3500 தருவதாக பேரம் பேசப்பட்டது.

லஞ்சம் கொடுக்காத விரும்பாத அந்த நபர் ,ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். போலீசார் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை மே 8 ல் பெருவாக்கோட்டை கிராமத்தில் உள்ள வி.ஏ.ஓ., அலுவலகத்தில் வி.ஏ.ஓ., நைனாமுகமது முன்னிலையில் தலையாரி சித்ராவிடம் கொடுத்தார்.

மறைந்திருந்த ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி., ராமச்சந்திரன் தலைமையிலான போலீசார் நைனாமுகமது, சித்ராவை கைது செய்தனர். வி.ஏ.ஓ.,வை, ராமநாதபுரம் ஆர்.டி.ஓ., ராஜமனோகரன் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். தலையாரியை, திருவாடானை தாசில்தார் ஆண்டி சஸ்பெண்ட் செய்தார்.






      Dinamalar
      Follow us