sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

பாம்பன் நெடுஞ்சாலை பாலத்தில் இன்று மீனவர்கள் மறியல் பேச்சுவார்த்தை தோல்வி

/

பாம்பன் நெடுஞ்சாலை பாலத்தில் இன்று மீனவர்கள் மறியல் பேச்சுவார்த்தை தோல்வி

பாம்பன் நெடுஞ்சாலை பாலத்தில் இன்று மீனவர்கள் மறியல் பேச்சுவார்த்தை தோல்வி

பாம்பன் நெடுஞ்சாலை பாலத்தில் இன்று மீனவர்கள் மறியல் பேச்சுவார்த்தை தோல்வி


ADDED : நவ 12, 2024 07:41 AM

Google News

ADDED : நவ 12, 2024 07:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமேஸ்வரம் : ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் நடந்த ஆர்.டி.ஓ., பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் அறிவித்தபடி இன்று(நவ.12) பாம்பன் தேசிய நெடுஞ்சாலை பாலத்தில் மறியல் நடக்கும் என மீனவர்கள் தெரிவித்தனர்.

இலங்கை சிறையில் வாடும் தமிழக மீனவர்கள் மற்றும் படகுகளை விடுவிக்கக் கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் பாம்பன் தேசிய நெடுஞ்சாலை பாலத்தில் மறியல் நடத்துவோம் என அறிவித்தனர். இதையடுத்து நேற்று ராமேஸ்வரம் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் செல்லப்பா தலைமையில் மீனவர்களுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது.

அதன் பின் ராமநாதபுரம் ஆர்.டி.ஓ., ராஜமனோகரன் தலைமையில் நடந்த பேச்சு வார்த்தையும் தோல்வியில் முடிந்ததால் இன்று காலை திட்டமிட்டபடி பாம்பன் தேசிய நெடுஞ்சாலை பாலத்தில் மறியல் நடக்கும் என மீனவர்கள் தெரிவித்தனர். இதனால் இன்று பாம்பனில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.






      Dinamalar
      Follow us