sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 03, 2026 ,மார்கழி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

கண்மாய் வரத்து கால்வாய் பிரச்னைக்கு தீர்வுகாண சிறுவயல் மக்கள் கோரிக்கை

/

கண்மாய் வரத்து கால்வாய் பிரச்னைக்கு தீர்வுகாண சிறுவயல் மக்கள் கோரிக்கை

கண்மாய் வரத்து கால்வாய் பிரச்னைக்கு தீர்வுகாண சிறுவயல் மக்கள் கோரிக்கை

கண்மாய் வரத்து கால்வாய் பிரச்னைக்கு தீர்வுகாண சிறுவயல் மக்கள் கோரிக்கை


ADDED : டிச 17, 2024 03:49 AM

Google News

ADDED : டிச 17, 2024 03:49 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்: கிளியூர் பிர்கா சிறுவயல் கிராம மக்கள் பொதுப்பணித்துறை கண்மாய் வரத்து கால்வாய் உரிமையை அதிகாரிகள் ஆய்வு செய்து இரு ஊர் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தினர்.

பரமக்குடி தாலுகா சிறுவயல் கிராம விவசாயிகள், பொது மக்கள் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

அதில், சிறுவயல் மேற்கு, கிழக்கு, நடுக்குடியிருப்பு ஆகியவற்றிற்கும் ஒரே பாசன கண்மாய் நீரில் 394 ஏக்கரில் விவசாயம் நடக்கிறது.

மழைக்காலங்களில் வரும் தண்ணீர் வரத்து கால்வாய் மூலம் சிறுவயல் கண்மாய் வருகிறது.

வைகை நீர் பி.கொடிக்குளம், பெரிய கண்மாய்க்கு சென்று அதன் உபரிநீர் வரத்து கால்வாய் மூலம் சிறுவயல் வருகிறது. இதற்கு மாறாக நாங்கள் செயல்படுவதாக புகார் தெரிவித்துள்ளனர்.

கடம்பூர் வரத்து கால்வாய்க்கும் சிறுவயல் கண்மாய் வரத்து கால்வாய்க்கும் சம்பந்தம் இல்லை. எனவே இரு கிராம வரத்து கால்வாய்கள் செட்டில்மென்ட் ஆவணங்களில் உள்ளது போல சரி செய்து இரு கிராம மக்கள் இடையே சட்டம் ஒழுங்கு பிரச்னை வராமல் நிரந்தரமாக தடுக்க அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தினர்.






      Dinamalar
      Follow us