sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

 பயங்கரவாதிகளுக்கு ஆதரவு வழக்கு: இன்ஸ்பெக்டர் சாட்சியம்

/

 பயங்கரவாதிகளுக்கு ஆதரவு வழக்கு: இன்ஸ்பெக்டர் சாட்சியம்

 பயங்கரவாதிகளுக்கு ஆதரவு வழக்கு: இன்ஸ்பெக்டர் சாட்சியம்

 பயங்கரவாதிகளுக்கு ஆதரவு வழக்கு: இன்ஸ்பெக்டர் சாட்சியம்


ADDED : டிச 16, 2025 05:08 AM

Google News

ADDED : டிச 16, 2025 05:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்: ராணுவ ரகசியங்களை திருட உடந்தையாக இருந்ததாக இலங்கை, மலேசியா நாட்டை சேர்ந்தவர்கள் மீது முதல் முறையாக வழக்குப்பதிவு செய்த இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி நேற்று ராமநாதபுரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் சாட்சியமளித்தார்.

ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே என்மனங்கொண்டான் பகுதியைச் சேர்ந்தவர் சித்தி சுலைஹா 52. இவரது அக்கா கணவர் மலேசிய குடியுரிமை பெற்ற அப்துல்ரஷீத் 58, அங்கு ஓட்டல் நடத்தி வருகிறார். இவர் ஓட்டலில் வேலை செய்த இலங்கை கொழும்பு பகுதியைச் சேர்ந்த முகமது யாசீர் 40, மனைவி பாரிகா ரிஸ்மியா 35, ஆகியோர் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக இருந்துள்ளனர். இவர்கள் சித்தி சுலைஹா வீட்டில் 2015 முதல் 2021 வரை தங்கி ஆதார்கார்டு, சிம்கார்டுகளை பெற்றுள்ளனர்.

பாகிஸ்தான் நபரான ஐ.எஸ்.ஐ.எஸ்., அமைப்பிடம் தொடர்புள்ள முகமது மிப்லால் மவுலவியிடம் சிம்கார்டுகளை முகமது யாசீர் கொடுத்துள்ளார். அதை பயன்படுத்தி முகமது மிப்லால் மவுலவி, மால்வேர் அட்டாக் மூலம் ராணுவ ரகசியங்களை திருடி வந்துள்ளார். ராணுவ அதிகாரிகளின் அலைபேசிகளை ஹேக் செய்து தகவல்களை அழித்துள்ளார். இதுகுறித்து கியூ பிரிவு போலீசார் 2021 ல் முகமது யாசீர், பாரிகா ரிஸ்மியா, அப்துல்ரஷீத், சித்தி சுலைஹா, முகமது மிப்லால் மவுலவி மீது வழக்குப்பதிவு செய்தனர்.

இவ்வழக்கு ராமநாதபுரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி மெஹபூப் அலிகான் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் வழக்கறிஞர் கார்த்திகேயன் ஆஜரானார். வழக்கை முதலில் விசாரித்த விசாரணை அதிகாரி இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி ஆஜராகி முகமது யாமீர், பாரிகா ரிஸ்மியா, அப்துல் ரஷீத் ஆகியோரிடம் வாக்குமூலம் பெற்றது, பொருட்கள் மற்றும் ஆவணங்களை கைப்பற்றியது குறித்து சாட்சி அளித்தார்.

வழக்கின் விசாரணை டிச., 18க்கு ஒத்திவைக்கப்பட்டது. மகேஸ்வரி தற்போது மண்டபம் அகதிகள் முகாம் இன்ஸ்பெக்டராக உள்ளார்.






      Dinamalar
      Follow us