ADDED : பிப் 04, 2024 11:26 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமேஸ்வரம் : முன்னாள் முதல்வர் அண்ணாதுரை நினைவு நாளையொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் பொது விருந்து நடந்தது.
சுவாமி, அம்மன் சன்னதியில் அபிஷேக, பூஜை நடந்தது.
இதில் கோயில் இணை ஆணையர் சிவராம்குமார், ராமேஸ்வரம் நகராட்சி தலைவர் நாசர்கான், துணைத்தலைவர் தட்சிணாமூர்த்தி, கோயில் ஊழியர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
பின் கோயில் அன்னதானக் கூடத்தில் நடந்த பொது விருந்தில் நகராட்சி கவுன்சிலர்கள் ராஜேஸ்வரி, தில்லை புஷ்பம் உட்பட கோயில் ஊழியர்கள் பங்கேற்றனர்.

