/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
நாளை பொதுவினியோக குறை தீர் முகாம்
/
நாளை பொதுவினியோக குறை தீர் முகாம்
ADDED : ஜன 24, 2025 04:22 AM
திருவாடானை: திருவாடானை தாலுகா கடம்பனேந்தலில் நாளை (ஜன.25) பொதுவினியோகத் திட்டத்தில் உள்ள குறைகளை சொல்ல மனுக்கள் அளிக்கலாம்.
பொது வினியோகத் திட்டத்தின் சேவைகளை அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமையில் மக்கள் குறை தீர்க்கும் முகாம் நடத்தப்படுகிறது. பொங்கல் தொடர் விடுமுறையால் இந்த முகாம் நாளை (ஜன.25) நடக்கிறது. திருவாடானை தாலுகா வட்ட வழங்கல் அலுவலர் கூறியதாவது:
திருவாடானை தாலுகா கடம்பனேந்தல் குரூப் கடம்பனேந்தலில் சிறப்பு குறை தீர் முகாம் நாளை (ஜன.25) காலை 10:00 முதல் மதியம் 1:00 மணி வரை நடைபெறும். பொது வினியோகத்தில் ஏற்படும் குறைகளை குறிப்பிட்டு மனுக்களாக கொடுக்கலாம். பெயர் சேர்ப்பது, நீக்குவது, முகவரி மாற்றம், அலைபேசி எண் மாற்றுதல், குடும்பதலைவர் போட்டோ மாற்றுதல் உள்ளிட்ட அனைத்து குறைகளையும் மனுக்களாக கொடுக்கலாம் என்றனர்.

