sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 21, 2025 ,மார்கழி 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

 இரவிலும் செவிலியர்கள் காத்திருப்பு போராட்டம்

/

 இரவிலும் செவிலியர்கள் காத்திருப்பு போராட்டம்

 இரவிலும் செவிலியர்கள் காத்திருப்பு போராட்டம்

 இரவிலும் செவிலியர்கள் காத்திருப்பு போராட்டம்


ADDED : டிச 20, 2025 06:49 AM

Google News

ADDED : டிச 20, 2025 06:49 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை வளாகத்தில் செவிலியர்கள் இரவு முழுவதும் அமர்ந்து காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.

தமிழகம் முழுவதும் தொகுப்பூதியத்தில் பணிபுரியும் செவிலியர்கள் நேற்று முன்தினம் சென்னையில் போராட்டம் நடத்தினர். அவர்களை போலீசார் கைது செய்து கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டில் விட்டனர். தொடர்ந்து பஸ் ஸ்டாண்டில் நள்ளிரவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர்கள் மருத்துவமனை வளாகத்திற்குள் காத்திருப்பு போராட்டம் நடத்தினர். தமிழ்நாடு செவிலியர் மேம்பாட்டு சங்கத்தின் மாவட்ட செயலாளர் தனலெட்சுமி தலைமை வகித்தார். செவிலியர்களுக்கு ஊதியத்துடன் மகப்பேறு விடுப்பு அளிப்பது, சம வேலைக்கு சம ஊதியம் வழங்குவது, கொரோனா காலத்தில் பணிசெய்த அனைத்து செவிலியர்களுக்கும் மீண்டும் பணி வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். சென்னையில் கைது செய்த செவிலியர்களை இரவில் பஸ் ஸ்டாண்டில் விட்டு சென்றதற்கு கண்டனம் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us