sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

ஆட்சியில் பங்கு கேட்கமாட்டோம் சொல்கிறார் மார்க்சிஸ்ட் சண்முகம்

/

ஆட்சியில் பங்கு கேட்கமாட்டோம் சொல்கிறார் மார்க்சிஸ்ட் சண்முகம்

ஆட்சியில் பங்கு கேட்கமாட்டோம் சொல்கிறார் மார்க்சிஸ்ட் சண்முகம்

ஆட்சியில் பங்கு கேட்கமாட்டோம் சொல்கிறார் மார்க்சிஸ்ட் சண்முகம்


ADDED : ஜூலை 25, 2025 02:15 AM

Google News

ADDED : ஜூலை 25, 2025 02:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்:''மார்க்சிஸ்ட் தலைமையில் ஆட்சி அமைந்தால் தவிர, வேறு எந்தக் கட்சி தலைமையிலான ஆட்சியிலும் பங்கு கேட்க மாட்டோம் ''என மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் சண்முகம் தெரிவித்தார்.

ராமநாதபுரத்தில் அவர் கூறியதாவது:

பார்லிமென்ட் கூட்டத்தொடர் நடக்கும் போது பிரதமர் மோடி வெளிநாடு சுற்றுப்பயணம் மேற்கொண்டது கண்டிக்கதக்கது. மதுரை ஆதினம் போலீசாரின் விசாரணைக்கு ஒத்துழைக்காமல் நீதிமன்ற உத்தரவை மீறியுள்ளார்.ராமநாதபுரம், புதுக்கோட்டை உள்ளிட்ட வறட்சி மாவட்டங்களில் காவிரி -வைகை -குண்டாறு வைப்பாறு திட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கி விரைவில் பணியை முடிக்க வேண்டும்.

பா.ஜ., உடன் அணிசேர்ந்து நிற்கும் வரை வேறு எந்த கட்சியும் அ.தி.மு.க.,வுடன் கூட்டணி சேராது. அதனுடன் கூட்டணி வைத்திருப்பது அ.தி.மு.க.,வின் நலனுக்கு விரோதமானது. அதற்கான முன்னுதாரணம் பல உள்ளன. அதை புரிந்து கொள்ளாமல், யாரும் கூட்டணிக்கு வரவில்லை என்ற விரக்தியில் அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி முன்னுக்குபின் முரணாக பேசுவது அவரின் மீதான மதிப்பை குறைக்கும். முதலில் அ.தி.மு.க.,வை ஒன்று சேர்க்க வேண்டும்.

பா.ஜ., உட்கட்சி பூசல் காரணமாக தான் துணை ஜனாதிபதி பதவி விலகியிருப்பதாக தெரிகிறது.

எங்கள் தலைமையில் ஆட்சி அமைந்தால் தவிர, வேறு எந்த கட்சி தலைமையிலான ஆட்சியிலும் பங்கு கேட்க மாட்டோம். த.வெ.க., தனது கொள்கை முடிவை அறிவித்துள்ளது. அதனுடன் கூட்டணி வைப்பதற்கான வாய்ப்பு குறைவு தான் என்றார்.






      Dinamalar
      Follow us