sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 31, 2025 ,மார்கழி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

கவுதமியிடம் நிலமோசடி வழக்கில் மேலாளர் ஜாமின் மனு தள்ளுபடி

/

கவுதமியிடம் நிலமோசடி வழக்கில் மேலாளர் ஜாமின் மனு தள்ளுபடி

கவுதமியிடம் நிலமோசடி வழக்கில் மேலாளர் ஜாமின் மனு தள்ளுபடி

கவுதமியிடம் நிலமோசடி வழக்கில் மேலாளர் ஜாமின் மனு தள்ளுபடி


ADDED : அக் 19, 2024 03:20 AM

Google News

ADDED : அக் 19, 2024 03:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்:-நடிகை கவுதமியிடம் ரூ.3 கோடியே 16 லட்சம் நிலமோசடி செய்த வழக்கில் சினிமா பைனான்சியர் அழகப்பனின் மேலாளர் ரமேஷ் சங்கரின் ஜாமின் மனுவை ராமநாதபுரம் மாஜிஸ்திரேட் பிரபாகரன் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்துார் அருகே சுவாத்தான் பகுதியில் 150 ஏக்கர் நிலம் வாங்கி தருவதாக காரைக்குடியை சேர்ந்த சினிமா பைனான்சியர் அழகப்பன் என்பவர் ரூ.3 கோடியே 16 லட்சம் நடிகை கவுதமியிடம் பெற்றுள்ளார். செபி நிறுவனம் விற்பனைக்கு தடை செய்துள்ள பிளஸிங் அக்ரோ பார்ம் இந்தியா லிட் நிறுவனத்தின் 64 ஏக்கர் நிலத்தினை கவுதமிக்கு எழுதிக்கொடுத்து அவரும், அவரது குடும்பத்தினர், நண்பர்கள் ஆகியோர் மோசடியில் ஈடுபட்டனர்.

கவுதமி புகாரில் நில புரோக்கர் நெல்லியான், பிளஸிங் அக்ரோ பார்ம் இந்தியா லிட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர்கள் ஜோசப் ஜெயராஜ், பாக்கியசாந்தி, ஜெயபாலன், அழகப்பனின் மேலாளர் ரமேஷ்சங்கர் உட்பட 12 பேர் மீது ராமநாதபுரம் மாவட்ட குற்றப்பிரிவு பிரிவு போலீசார் வழக்குப்பதிந்தனர். அழகப்பன் மற்றொரு வழக்கில் வேலுார் சிறையில் உள்ளார்.

அழகப்பனின் மேலாளர் ரமேஷ் சங்கரை சென்னையில் அக்., 3ல் போலீசார் கைது செய்தனர். அவர் ராமநாதபுரம் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஜாமின் மனு தாக்கல் செய்திருந்தார்.

வழக்கின் முக்கியமான பங்கு ரமேஷ் சங்கருடையது என்பதால் ஜாமின் வழங்க கூடாது, என ஆட்சேபம் தெரிவித்து கவுதமி மனு செய்தார்.

ரமேஷ் சங்கரின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து மாஜிஸ்திரேட் பிரபாகரன் உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us