sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

தி.மு.க., ஆட்சியில் தமிழகம் கொலைக்களமாக மாறியுள்ளது  ஜான் பாண்டியன் குற்றச்சாட்டு

/

தி.மு.க., ஆட்சியில் தமிழகம் கொலைக்களமாக மாறியுள்ளது  ஜான் பாண்டியன் குற்றச்சாட்டு

தி.மு.க., ஆட்சியில் தமிழகம் கொலைக்களமாக மாறியுள்ளது  ஜான் பாண்டியன் குற்றச்சாட்டு

தி.மு.க., ஆட்சியில் தமிழகம் கொலைக்களமாக மாறியுள்ளது  ஜான் பாண்டியன் குற்றச்சாட்டு


ADDED : ஆக 11, 2025 02:44 AM

Google News

ADDED : ஆக 11, 2025 02:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்:''தி.மு.க., ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து தமிழகம் கொலைக்களமாக மாறியுள்ளது'' என தமிழக மக்கள் முன்னேற்றக் கழக நிறுவனத் தலைவர் ஜான் பாண்டியன் தெரிவித்தார்.

ராமநாதபுரத்தில் அவர் கூறியதாவது:எங்கள் கட்சி வெள்ளி விழாவை முன்னிட்டு சமூக சமத்துவ மாநாடு ஆக.24 திண்டுக்கலில் நடக்கவுள்ளது. இதில் தேவேந்திர குல வேளாளர் மக்களின் பட்டியல் வெளியேற்றம் வலியுறுத்தப்படும்.

தி.மு.க., ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து தமிழகம் கொலைக்களமாக மாறியுள்ளது. மது, கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள் காரணமாக அதிக குற்றங்கள் நடக்கிறது. போலீசாரும் தன்னிச்சையாக செயல்படுகின்றனர். சமீபத்தில் எஸ்.ஐ., கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட நபரை சட்டத்தை மதிக்காமல் என்கவுன்டர் செய்துள்ளனர்.

தேசிய ஜனநாயகக் கூட்டணியுடன் அ.தி.மு.க., நல்ல உறவில் உள்ளது. நாங்களும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தான் உள்ளோம். தேர்தலை பொறுத்து கூட்டணி நிலைப்பாடு மாறுபடும். எங்கள் கட்சி யாருடன் கூட்டணி அமைக்குதோ, அந்த கட்சி ஆட்சி அமைக்கும். மீனவர்களின் பிரச்னைக்கு நிரந்தர தீர்வுகாண முறையாக எல்லை வரையறுக்க வேண்டும். மத்திய அரசை மட்டும் குற்றம் சொல்லாமல், மாநில அரசும் மீனவர்களின் பிரச்னையில் முடிவு எடுக்க வேண்டும். இலங்கையில் சிறை பிடிக்கப்படும் மீனவர்கள் மீது பொய் வழக்கு பதிவு செய்கின்றனர் என்றார்.






      Dinamalar
      Follow us