/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
வாகனத்தில் ஒலிபெருக்கி மாணவர்கள் பாதிப்பு
/
வாகனத்தில் ஒலிபெருக்கி மாணவர்கள் பாதிப்பு
ADDED : மார் 06, 2024 04:46 AM
திருவாடானை : திருவாடானை, தொண்டி பகுதியில் சரக்கு வாகனங்களில் காய்கறிகள், பழங்களை ஒலிபெருக்கிகளில் கூவி விற்பனை செய்கின்றனர். அனைத்து தெருக்களுக்கும் செல்லும் வியாபாரிகள் பொதுமக்களை கவரும் வகையில் பாடல்களுடன் விளம்பரம் செய்கின்றனர்.
மருத்துவமனை, பள்ளி கட்டடங்கள் அருகே செல்லும் போது நோயாளிகளும், மாணவர்களும் பாதிக்கப்படுகின்றனர். இது குறித்து பெற்றோர் கூறியதாவது:
பள்ளி அருகிலும் ஒலிபெருக்கியை பயன்படுத்துகின்றனர். தற்போது பிளஸ் 2 தேர்வு நடப்பதால் மாணவர்களுக்கு கவனச் சிதறல்கள் ஏற்படுகிறது.
எனவே பொதுத்தேர்வு நிறைவடையும் வரை ஒலிபெருக்கிகளை குறிப்பிட்ட நேரம் மட்டுமே பயன்படுத்த கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும்.
வாகனங்களில் அதிக சத்தத்துடன் கூவி விற்பனை செய்யவும் சம்பந்தப்பட்ட வாகன ஓட்டுநர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

