sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

பரமக்குடி அருகே இரு தரப்பு மோதல் இரு இடங்களில் மறியல்

/

பரமக்குடி அருகே இரு தரப்பு மோதல் இரு இடங்களில் மறியல்

பரமக்குடி அருகே இரு தரப்பு மோதல் இரு இடங்களில் மறியல்

பரமக்குடி அருகே இரு தரப்பு மோதல் இரு இடங்களில் மறியல்


ADDED : நவ 04, 2025 04:02 AM

Google News

ADDED : நவ 04, 2025 04:02 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே இரு தரப்பு மோதலையடுத்து ஆங்காங்கே பஸ் மறியலில் ஈடுபட்டனர்.

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி தாலுகா இளமனுார் கிராமத்தில் ஒரு தரப்பினர் போர்டு வைத்த நிலையில், நேற்று காலை மற்றொரு தரப் பினர் அகற்ற கூறினர். இதனால் ஏற்பட்ட பிரச்னை மோதலாக மாறியதால் அவர்களை கைது செய்ய வலியுறுத்தினர்.

இந்நிலையில் நேற்று இரவு 7:00 மணி முதல் பரமக்குடி ஐந்து முனை ரோடு பகுதியில் ஒரு தரப்பினர் ரோடு மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பதட்டமான சூழல் உரு வாகியதால் கடைகள் அடைக்கப்பட்டன.

இதேபோல் மற்றொரு தரப்பினர் நயினார் கோவில் விலக்கு ரோடு மற்றும் பர்மா காலனி பகுதியில் ரோடு மறியல் செய்தனர்.

ராமநாதபுரம் எஸ்பி., சந்தீஷ், ஏ.டி.எஸ்.பி., சுப்பையா, பரமக்குடி டி.எஸ்.பி., சபரிநாதன் தலைமையிலான போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால் பரபரப்பான சூழல் நிலவியதால் போலீசார் குவிக்கப்பட்டனர்.






      Dinamalar
      Follow us