sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், ஜனவரி 06, 2026 ,மார்கழி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

இலங்கை போலீஸ்காரர் வழக்கு விசாரணை அக்.4க்கு தள்ளிவைப்பு

/

இலங்கை போலீஸ்காரர் வழக்கு விசாரணை அக்.4க்கு தள்ளிவைப்பு

இலங்கை போலீஸ்காரர் வழக்கு விசாரணை அக்.4க்கு தள்ளிவைப்பு

இலங்கை போலீஸ்காரர் வழக்கு விசாரணை அக்.4க்கு தள்ளிவைப்பு


ADDED : செப் 10, 2024 05:05 AM

Google News

ADDED : செப் 10, 2024 05:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்: இலங்கையில் போதைப்பொருள் திருடி தலைமறைவாகி தப்பி ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடியில் கைதான அந்நாட்டு போலீஸ்காரர் பிரதீப் குமார் பண்டாரா மீதான வழக்கு விசாரணை அக்.4க்கு தள்ளி வைக்கப்பட்டது.

இலங்கை கொழும்பு புறநகர் சபுகஸ்கந்த பகுதி மரக்கடையில் இருந்து 2020 ஆக.26ல் இலங்கை போலீசார் 23 கிலோ ஹெராயின் போதைப்பொருளை கைப்பற்றினர். இந்த கடத்தல் தொடர்பாக அனுர குமார என்பவரை கைது செய்தனர். இவர் இலங்கை துறைமுகம் போலீஸ் ஸ்டேஷனில் பணியாற்றும் பிரதீப் குமார் பண்டாரா 32, அண்ணன் என தெரிந்தது.

துறைமுகம் போலீசார் கைப்பற்றி வைத்திருந்த போதை பொருளை பிரதீப் குமார் பண்டாரா பணி நேரத்தில் திருடி அண்ணனிடம் கொடுத்திருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர். இதனால் அவரையும் வழக்கில் சேர்க்க முடிவு செய்தனர். இதை அறிந்தவர் பிரதீப் குமார் பண்டாரா பைபர் படகில் தமிழகம் தப்பி வந்தார்.

பிரதீப் குமார் பண்டாராவை 2020 செப்.4ல் மண்டபம் கடலோர காவல்படை போலீசார் கைது செய்து சென்னை பூந்தமல்லி சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கு தற்போது சி.பி.சி.ஐ.டி., போலீசாருக்கு மாற்றப்பட்டு விசாரணை நடக்கிறது. பிரதீப் குமார் பண்டாரா ஜாமின் பெற்று திருச்சி அகதிகள் முகாமிற்கு மாற்றப்பட்டார்.

ராமநாதபுரம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நீதிபதி குமரகுரு முன்னிலையில் வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது இலங்கை போலீஸ்காரர் பிரதீப்குமார் பண்டாரா ஆஜரானார். நீதிபதி வழக்கை அக்.4க்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us