ADDED : ஏப் 05, 2024 12:37 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பரமக்குடி:ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் வாரிசு சான்றிதழ் வழங்க ரூ.2000 லஞ்சம் வாங்கிய, எமனேஸ்வரம் குரூப் வி.ஏ.ஓ., பூமிநாதனை போலீசார் கைது செய்தனர்.
பரமக்குடி காந்திநகர் தெற்குதெருவை சேர்ந்தவர் சந்திரசேகர் 48. இவர் வாரிசு சான்றிதழ் பெற இ.சேவை மையத்தில் விண்ணப்பித்துள்ளார். எமனேஸ்வரம் வி.ஏ.ஓ., பூமிநாதன் 48, தனக்கு ரூ. 2000 ரூபாயை லஞ்சமாக கொடுத்தால் மேலதிகாரிக்கு பரிந்துரை செய்வேன் எனக் கூறியுள்ளார்.சந்திரசேகர் ராமநாதபுரம் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசாருக்கு புகார் தெரிவித்தார்.
அவர்கள் கொடுத்த 2000 ரூபாயை பூமிநாதனிடம் சந்திரசேகர் கொடுத்தார். அப்போது, லஞ்ச ஒழிப்பு போலீசார் பூமிநாதனை கைது செய்தனர்.

