sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

பரமக்குடியில் பூ பல்லக்கில் பவனி வந்தார் பெருமாள்; திருக்கல்யாண விழாவில் கோலாகலம்

/

பரமக்குடியில் பூ பல்லக்கில் பவனி வந்தார் பெருமாள்; திருக்கல்யாண விழாவில் கோலாகலம்

பரமக்குடியில் பூ பல்லக்கில் பவனி வந்தார் பெருமாள்; திருக்கல்யாண விழாவில் கோலாகலம்

பரமக்குடியில் பூ பல்லக்கில் பவனி வந்தார் பெருமாள்; திருக்கல்யாண விழாவில் கோலாகலம்


ADDED : மார் 31, 2024 04:41 AM

Google News

ADDED : மார் 31, 2024 04:41 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பரமக்குடி : - பரமக்குடி பெருமாள் கோயிலில் திருக்கல்யாண விழாவில் பூப்பல்லக்கில் ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் சுந்தரராஜ பெருமாள் கோலாகலமாக வீதி வலம் வந்தார்.

கோயிலில் மார்ச் 25ல் பங்குனி உத்திரத்தன்று சவுந்தரவல்லி தாயார், சுந்தரராஜ பெருமாளுக்கு திருக்கல்யாணம் நடந்தது.

தினமும் பெருமாள், தாயார் ஊஞ்சல் சேவையில் அருள் பாலித்தனர்.

நேற்று முன்தினம் காலை அபிஷேக ஆராதனைகள் நடந்தது.

தொடர்ந்து மாலை 6:00 மணிக்கு சுந்தரராஜ பெருமாள் அமர்ந்த கோலத்தில் பூப்பல்லக்கில் எழுந்தருளினார்.

மேலும் ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் பக்தர்களின் 'கோவிந்தா' கோஷம் முழங்க கோலாகலமாக வீதி உலா வந்தார்.

மேளதாளம் முழங்க வாண வேடிக்கைகளுடன் பவனி வந்த பெருமாள் இரவு 12:00 மணிக்கு கோயிலை அடைந்தார்.

*இதே போல் எமனேஸ்வரம் பெருந்தேவி தாயார், வரதராஜ பெருமாளுக்கு திருக்கல்யாண உற்ஸவம் நடந்தது.

தொடர்ந்து 5ம் நாளான நேற்று முன்தினம் இரவு பூப்பல்லக்கில் தாயார், பெருமாள் உடன் வீதி உலா வந்தார்.

ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.






      Dinamalar
      Follow us