sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், ஜனவரி 06, 2026 ,மார்கழி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

இலந்தை செடி முள் மீது படுத்து பூஜாரி அருள்வாக்கு

/

இலந்தை செடி முள் மீது படுத்து பூஜாரி அருள்வாக்கு

இலந்தை செடி முள் மீது படுத்து பூஜாரி அருள்வாக்கு

இலந்தை செடி முள் மீது படுத்து பூஜாரி அருள்வாக்கு


ADDED : ஆக 19, 2024 07:18 AM

Google News

ADDED : ஆக 19, 2024 07:18 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கமுதி: ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பாம்புல்நாயக்கன்பட்டி கோயில் விழாவில் பூஜாரி சுந்தர்ராஜ் இலந்தை செடி முள் மீது படுத்து அருள்வாக்கு கூறினார்.

பாம்புல்நாயக்கன்பட்டியில் உள்ள கரியமல்லம்மாள் கோயில் ஆடிப்பொங்கல், முளைப்பாரி விழா நடந்தது. நேற்று முன்தினம் பக்தர்கள் அக்னிசட்டி,ஆயிரம் கண் பானை மற்றும் பக்தர்கள் உடல்முழுவதும் சகதி பூசி சேத்தாண்டி வேடம் அணிந்து வந்தனர்.

நேற்று வினோதமான முறையில் பக்தர்கள் சாக்கு வேடம் அணிந்து கிராமத்தின் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக வந்து கோயிலில் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

முக்கிய நிகழ்ச்சியாக அதே கிராமத்தைச் சேர்ந்த பூஜாரி சுந்தர்ராஜ் விவசாய நிலத்தின் அருகே இலந்தை செடிமுள் மீது படுத்து மக்களுக்கு அருள்வாக்கு கூறினார்.

கமுதி அதனை சுற்றியுள்ள கிராமத்தினர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us