sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 15, 2025 ,கார்த்திகை 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

பரமக்குடி குடியிருப்புகளில் திரியும் குரங்கு கூட்டம்; தேவை வனத்துறை கண்காணிப்பு

/

பரமக்குடி குடியிருப்புகளில் திரியும் குரங்கு கூட்டம்; தேவை வனத்துறை கண்காணிப்பு

பரமக்குடி குடியிருப்புகளில் திரியும் குரங்கு கூட்டம்; தேவை வனத்துறை கண்காணிப்பு

பரமக்குடி குடியிருப்புகளில் திரியும் குரங்கு கூட்டம்; தேவை வனத்துறை கண்காணிப்பு


ADDED : ஜூன் 30, 2024 04:57 AM

Google News

ADDED : ஜூன் 30, 2024 04:57 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பரமக்குடி : -பரமக்குடி சுற்று வட்டார குடியிருப்பு பகுதிகளில் குரங்குகள் கூட்டமாக திரிவதால் வனத்துறையினர் கண்காணிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

பரமக்குடி நகராட்சி மற்றும் அருகில் உள்ள பகுதிகளில் அவ்வப்போது குரங்குகள் நடமாட்டம் உள்ளது. கடந்த சில நாட்களாக பரமக்குடி அருகே வேந்தோணி, ஐ.டி.ஐ., மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் குரங்குகள் குட்டிகளுடன் குடும்பமாக திரிகின்றன.

இதனால் தெருக்களில் செல்லும் குழந்தைகள் அச்சத்துடன் செல்கின்றனர். மேலும் காய்கறிகள், பழங்கள் என உணவு பொருட்களை கொண்டு செல்வோரிடம் இருந்து குரங்குகள் பறித்துச் செல்வதால் அச்சமடைந்துள்ளனர்.

வீடுகளின் பால்கனிகளில் அமர்ந்து உணவு பொருட்களை தேடி வருவதால் அப்பகுதி மக்கள் திகைப்பில் உள்ளனர்.

குரங்குகள் குட்டிகளுடன் வலம் வருவதால் அவற்றை பாதுகாக்கும் நோக்கில் மிகுந்த ஆக்ரோஷத்துடன் உள்ளன.

எனவே ஒவ்வொரு நாளும் இடம் பெயரும் குரங்கு கூட்டத்தை வனத்துறை அதிகாரிகள் கண்காணித்து அவற்றை உரிய இடங்களில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us