sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

ஆயுத பூஜை தினத்தில் வழக்கத்தை விட குப்பை அதிகம்

/

ஆயுத பூஜை தினத்தில் வழக்கத்தை விட குப்பை அதிகம்

ஆயுத பூஜை தினத்தில் வழக்கத்தை விட குப்பை அதிகம்

ஆயுத பூஜை தினத்தில் வழக்கத்தை விட குப்பை அதிகம்


ADDED : அக் 14, 2024 09:07 PM

Google News

ADDED : அக் 14, 2024 09:07 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊட்டி : ஊட்டி நகராட்சி வார்டுகளில் ஆயுத பூஜையை ஒட்டி வழக்கத்தை விட, 15 டன் அளவுக்கு அதிகமாக குப்பை கழிவுகள் சேர்ந்துள்ளது.

ஊட்டி நகராட்சியில், 36 வார்டுகள் உள்ளன. 1.30 லட்சம் பேர் வசித்து வருகின்றனர். ஆயுத பூஜையை ஒட்டி வீடு, கடை, வணிக நிறுவனம் மற்றும் நகரில் ஆங்காங்கே தனியார் வாகன ஓட்டிகள் , ஆட்டோக்களுக்கு ஆயுத பூஜை நடந்தது. ஆயுத பூஜைக்காக பூ மாலை, தோரணங்கள், வாழை இலை பயன்படுத்தப்பட்டது.

11, 12 ம் தேதிகளில் ஆயுத பூஜை சிறப்பாக கொண்டாடப்பட்டது. பூஜை முடிந்ததை அடுத்து பயன்படுத்தப்பட்ட பொருட்கள் அனைத்தையும் வீட்டு உரிமையாளர்கள் சேகரித்து வைத்து, குப்பைகளை சேகரிக்க வரும் துப்பரவு பணியாளர்களிடம் கொடுத்தனர். கடை, வணிக நிறுவனங்களில் வெளியேற்றப்பட்ட குப்பைகள் நகரில் ஆங்காங்கே வீசி எறியப்பட்டுள்ளது.

நேற்று, வார்டுகளில் வழக்கத்தை விட குப்பைகள் அதிகரித்ததால், நண்பகல், 12:00 மணி வரை குப்பை சேகரிக்கும் பணி தொடர்ந்தது. ஆயுத பூஜையை ஒட்டி குப்பை கழிவுகள், 15 டன் அளவுக்கு கூடுதலாக சேர்ந்ததால் கடும் சிரமத்திற்கு இடையே துப்புரவு பணியாளர்கள் அகற்றினர்.

அதிகாரிகள் கூறுகையில்,' நகராட்சி வார்டுகளில் தினமும் சராசரியாக, 25 டன் அளவுக்கு மட்கும் குப்பை, மட்காத குப்பைகள் சேகரிக்கப்பட்டு, தீட்டுக்கல் குப்பை கிடங்குக்கு அனுப்பப்படுகிறது. ஆயுத பூஜை விழாவை தொடர்ந்து, கூடுதலாக 15 டன் வரை குப்பை கழிவுகள் சேகரிப்பட்டுள்ளன,' என்றனர்.






      Dinamalar
      Follow us