sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 30, 2025 ,மார்கழி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

 மூலிகை தோட்டத்தில் தியான மண்டபம்; யோகா செய்ய பயணிகளுக்கு அனுமதி

/

 மூலிகை தோட்டத்தில் தியான மண்டபம்; யோகா செய்ய பயணிகளுக்கு அனுமதி

 மூலிகை தோட்டத்தில் தியான மண்டபம்; யோகா செய்ய பயணிகளுக்கு அனுமதி

 மூலிகை தோட்டத்தில் தியான மண்டபம்; யோகா செய்ய பயணிகளுக்கு அனுமதி


ADDED : டிச 24, 2025 06:19 AM

Google News

ADDED : டிச 24, 2025 06:19 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலுார்: கூடலுார், ஜீன்பூல் தாவர மையத்தில் தியானம் மற்றும் யோகா செய்வதற்காக மூலிகை தோட்டத்தில், 4 லட்சம் ரூபாயில், அமைத்துள்ள தியான மண்டபம் சுற்றுலா பயணிகளை கவர்ந்துள்ளது.

கூடலுார் பகுதியில் சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில், நாடுகாணி ஜீன்பூல் சூழல் சுற்றுலா தவர மையத்தில், தமிழ்நாடு பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் பருவநிலை மாற்றத்திற்கான பசுமை திட்டத்தில், சுற்றுலா சார்ந்த உள்கட்டமைப்பு பணிகள் நடந்து வருகின்றன.

இந்நிலையில், இங்கு வரும் சுற்றுலா பயணிகள் மூலிகை செடிகள் அதன் மருத்துவ குணங்களை தெரிந்து கொள்ளும் வகையில், மூலிகை தோட்டம் அமைத்துள்ளனர். இங்கு, 150-க்கும் மேற்பட்ட மூலிகள் செடிகள் நடவு செய்யப்பட்டு, அதன் பெயர் அர்த்தம் மருத்துவ குணம் குறிக்கும் விபரங்களையும் வைத்துள்ளனர்.

மேலும், அமைதியான சூழலில் அமைந்துள்ள மூலிகை தோட்டத்தின் மையப்பகுதியில், 4.1 லட்சம் ரூபாய் செலவில், தியான மண்டபம் அமைத்துள்ளனர். மூலிகை தோட்டத்துக்கு வரும் சுற்றுலா பயணிகள், அமைதியான சூழலில் மண்டபத்தில் ஓய்வெடுத்து, தியானம், யோகாசனம் செய்யும், வகையில் மண்டபம் அமைந்துள்ளது. இந்த தியான மண்டபம் பணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது.

வனத்துறையினர் கூறு கையில்,'மூலிகை தோட்டத்தை பார்வையிட வரும் சுற்றுலா பயணிகள்,மூலிகை செடிகளின் மருத்துவ பயன்கள் குறித்து தெரிந்து கொள்வதுடன், அங்கு ஓய்வெடுத்து செல்ல தியான மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. மிதமான காலநிலை நிலவும் இப்பகுதியில், தியானம் மற்றும் யோகாசனம் செய்வதுஉடலுக்கும், மனதுக்கும் இதமாகவும், பயனுள்ளதாக இருக்கும்,' என்றனர்.






      Dinamalar
      Follow us