/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஒன்னதலை கிராமத்தில் மாரியம்மன் திருவிழா
/
ஒன்னதலை கிராமத்தில் மாரியம்மன் திருவிழா
ADDED : பிப் 19, 2024 12:43 AM

கோத்தகிரி;கோத்தகிரி ஒன்னதலை கிராமத்தில், மாரியம்மன் கோவில் திருவிழா, சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இவ்விழாவில், நேற்று காலை, அம்மனுக்கு அபிஷேக ஆராதனை, மலர் வழிபாடுடன் துவங்கியது. காலை, 11:00 மணிக்கு, அலங்கரிக்கப்பட்ட அம்மனின் திருவீதி உலா நடந்தது. ஒவ்வொரு வீடுகளிலும் பக்தர்கள் பூஜை கொடுத்து, அம்மனை வழிபட்டனர். பகல், 2:00 மணிக்கு, வீதி உலா ஆடல் பாடலுடன், மீண்டும் கோவிலை அடைந்தது. தொடர்ந்து, அம்மனுக்கு முடி காணிக்கை நேர்த்திக்கடன் செலுத்தப்பட்டது. மாலை, 4:00 மணிக்கு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.தொடர்ந்து, கிராம பெண்கள் உட்பட, அரக்கோல் ஆட்டம் ஆடி மகிழ்ந்தனர். விழாவில் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து, திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

