/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பாலிடெக்னிக் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம் : 317 பேருக்கு பணி நியமன ஆணை
/
பாலிடெக்னிக் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம் : 317 பேருக்கு பணி நியமன ஆணை
பாலிடெக்னிக் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம் : 317 பேருக்கு பணி நியமன ஆணை
பாலிடெக்னிக் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம் : 317 பேருக்கு பணி நியமன ஆணை
ADDED : பிப் 19, 2024 12:41 AM
ஊட்டி:ஊட்டி அரசு பாலிடெக்னிக் கல்லுாரில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில், 317 பேருக்கு உடனடியாக பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.
கலெக்டர் அருணா தலைமை வகித்தார்.
சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், முகாமை துவக்கி வைத்து பேசியதாவது:
நம் மாநில இளைஞர்களுக்கு வேலை அளிக்கும் வகையில், வேலைவாய்ப்பு துறை மற்றும் மகளிர் மேம்பாட்டு நிறுவனம் மூலமாக, தனியார் துறை நிறுவனங்களில் வேலை நாடுவர்களை பணியமர்த்தவும், இளைஞர்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சி வழங்கவும், வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது.
அதன்படி, கூடலுாரில் நடந்த வேலை வாய்ப்பு முகாமில், 265 பேர்; ஊட்டி பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் நடந்த முகாமில், 1,279 பேருக்கும் பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது.
அரசு கலை கல்லுாரியில் நடந்த முகாமில், 361, அரசு பாலிடெக்னிக் கல்லுாரியில் நடந்த ஐந்தாவது வேலை வாய்ப்பு முகாமில், 317 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டு பணியில் சேர்ந்துள்ளனர்.
சுயதொழில் தொடங்க ஆர்வமுள்ள நபர்களுக்கு, பல்வேறு திட்டங்கள் மூலம், கடன் உதவி வழங்கப்படுகிறது.
தொழில் முனைவோர் அதனை பயன்படுத்தி பொருளாதாரத்தில் முன்னேற வேண்டும். இவ்வாறு அமைச்சர் கூறினார்.
இதில், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் சாகுல் ஹமீது, ஊட்டி அரசு பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் கணேஷ் உட்பட, பலர் பங்கேற்றனர்.

