sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 28, 2025 ,மார்கழி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

 தேயிலை விவசாயிகளுக்கு மானியம் வேண்டும் மலை மாவட்ட விவசாயிகள் சங்கம் கோரிக்கை

/

 தேயிலை விவசாயிகளுக்கு மானியம் வேண்டும் மலை மாவட்ட விவசாயிகள் சங்கம் கோரிக்கை

 தேயிலை விவசாயிகளுக்கு மானியம் வேண்டும் மலை மாவட்ட விவசாயிகள் சங்கம் கோரிக்கை

 தேயிலை விவசாயிகளுக்கு மானியம் வேண்டும் மலை மாவட்ட விவசாயிகள் சங்கம் கோரிக்கை


ADDED : டிச 25, 2025 06:42 AM

Google News

ADDED : டிச 25, 2025 06:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோத்திகிரி: 'தேயிலை விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு, 10 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்க வேண்டும்,' என, விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

மலை மாவட்ட சிறு விவசாயிகள் நல சங்கத் தலைவர் தும்பூர் போஜன், துறை அதிகாரிகளுக்கு அனுப்பி உள்ள கோரிக்கை மனு:

நீலகிரி மாவட்டத்தில், தேயிலை விவசாயத்தை, 65 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள், 2 லட்சத்திற்கும் மேல் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் நம்பியுள்ளனர்.

கடந்த, 30 ஆண்டுகளுக்கு மேலாக, பசுந்தேயிலை விலை வீழ்ச்சி அடைந்து வருவதால், விவசாயிகள் குடும்பங்களை பராமரிக்க முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனால், சிறு விவசாயிகள் தங்களது தோட்டங்களை சமவெளி பகுதியை சேர்ந்தவர்களுக்கு விற்பனை செய்து, சமவெளி பகுதிக்கு குடி பெயர்ந்து வருவது தொடர்கிறது. இதனால், பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலான விவசாய நிலங்கள் கட்டட காடாக மாறி வருகின்றன.

மனித - விலங்கு மோதல்களாலும், தேயிலை விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இயற்கை இடர்பாடுகளாலும், பசுந்தேயிலை மகசூல் குறைந்து வருகிறது. எனவே, மத்திய மாநில அரசு அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து மாவட்ட விவசாயிகளை பாதுகாக்க ஒரு ஏக்கருக்கு, 10 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us