sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

ஆதரவற்றோர் காப்பகம் நகராட்சியிடம் ஒப்படைப்பு; ஒரு வாரம் விசாரணைக்கு பின் அதிரடி நடவடிக்கை

/

ஆதரவற்றோர் காப்பகம் நகராட்சியிடம் ஒப்படைப்பு; ஒரு வாரம் விசாரணைக்கு பின் அதிரடி நடவடிக்கை

ஆதரவற்றோர் காப்பகம் நகராட்சியிடம் ஒப்படைப்பு; ஒரு வாரம் விசாரணைக்கு பின் அதிரடி நடவடிக்கை

ஆதரவற்றோர் காப்பகம் நகராட்சியிடம் ஒப்படைப்பு; ஒரு வாரம் விசாரணைக்கு பின் அதிரடி நடவடிக்கை


ADDED : அக் 04, 2024 07:21 AM

Google News

ADDED : அக் 04, 2024 07:21 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊட்டி : ஊட்டி அருகே ஆதரவற்றோர் காப்பகத்தில், முறைகேடு புகார் தொடர்பாக நடந்த விசாரணைக்கு பின், காப்பகம் நகராட்சியிடம் ஒப்படைக்கப்பட்டது.

நீலகிரி மாவட்டம், ஊட்டி அருகே உள்ள முள்ளிக்கொரையில் அப்துல் கலாம் ஆதரவற்றோர் இல்லம் செயல்பட்டு வருகிறது. இந்த காப்பகத்தில் பல்வேறு முறைகேடு நடந்துள்ளதாக, நாம் தமிழர் கட்சியின், ஊட்டி தொகுதி இணை செயலாளர் செல்வகுமார், மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யாவை சந்தித்து சமீபத்தில் புகார் மனு அளித்தார்.

தொடர்ந்து, ஆர்.டி.ஓ., மகராஜ், நகராட்சி கமிஷனர் ஜஹாங்கீர் பாஷா, தனிதாசில்தார் சங்கீதா ராணி ஆகியோர் அடங்கிய மூன்று பேர் கொண்ட குழுவை, கலெக்டர் அமைத்து விசாரணை நடத்த உத்தரவிட்டார்.

இக்குழு அப்துல் கலாம் ஆதரவற்றோர் இல்லத்தில் ஆய்வு நடத்தி, குற்றச்சாட்டுகள் குறித்து நிர்வாகி தஸ்தகீரிடம் விசாரணை நடத்தினர். அவர் கொடுத்த ஆவணங்களையும் சோதனை செய்தனர். இதன் விசாரணை அறிக்கையை நேற்று முன்தினம் கலெக்டரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்நிலையில், நேற்று விசாரணை குழு மற்றும் போலீசார் காப்பகத்திற்கு சென்று நிர்வாகி தஸ்தகீரிடம் மீண்டும் விசாரணை நடத்தி, உடனடியாக அவரை அங்கிருந்து வெளியேற்றி, காப்பகத்தை நகராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைத்தனர்.

ஆர்.டி.ஓ., மகராஜ் நிருபர்களிடம் கூறியதாவது, ''கலெக்டர் நியமித்த மூன்று பேர் கொண்ட குழு காப்பகத்தில் கடந்த ஒரு வாரம் விசாரணை நடத்தி, அறிக்கையை கலெக்டரிடம் சமர்பித்தோம்.

குற்றச்சாட்டில் சில உண்மைகள் இருப்பது தெரியவந்ததை அடுத்து, காப்பகத்தின் நிர்வாகி தஸ்தகீர் வெளியேற்றப்பட்டு, காப்பகம் நகராட்சியிடம் ஒப்படைக்கப்பட்டது,'' என்றார்.

நகராட்சி கமிஷனர் ஜஹாங்கீர் பாஷா நிருபர்களிடம் கூறுகையில், '' காப்பகத்தில் தற்போது மூன்று ஊழியர்கள் உள்ளனர். அவர்களை வைத்து காப்பகம் நடத்தப்படுகிறது. காப்பகத்தை நடத்த, தொண்டு நிறுவனங்கள் முன் வந்தால், கலெக்டர் அறிவுறுத்தல் படி அவர்களிடம் ஒப்படைக்கப்படும்,'' என்றார். இந்நிலையில், தஸ்தகீரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us