sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 15, 2025 ,கார்த்திகை 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

மரங்களில் பரண் அமைத்து வனத்தில் தீ கண்காணிப்பு

/

மரங்களில் பரண் அமைத்து வனத்தில் தீ கண்காணிப்பு

மரங்களில் பரண் அமைத்து வனத்தில் தீ கண்காணிப்பு

மரங்களில் பரண் அமைத்து வனத்தில் தீ கண்காணிப்பு


ADDED : பிப் 15, 2024 02:43 AM

Google News

ADDED : பிப் 15, 2024 02:43 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலுார்:முதுமலை மசினகுடி பகுதியில் வனத்துறையினர், மரங்களில் பரண் அமைத்து வனத்தீயை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்தில் தொடரும் வறட்சியின் தாக்கத்தால், வனப்பகுதி பசுமை இழந்துள்ளது. வன விலங்குகளுக்கு உணவு, குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது.

தொடரும் வறட்சியில் வனத்தீ அபாயமும் ஏற்பட்டுள்ளது. இதை தடுக்க, தீ தடுப்பு கோடுகள் அமைத்து வருகின்றனர். மேலும், வனத்தீ ஏற்படுவதை தடுக்க கண்காணிப்பு பணியிலும் வன ஊழியர்கள் ஈடுபடுகின்றனர்.

இந்நிலையில், மசினகுடி வனப்பகுதியில் உயரமான இடங்களில் உள்ள மரங்களில், பரண் அமைத்து வனத்தீயை கண்காணிக்கும் பணியில் வன ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

பைனாகுலர் போன்ற தொலைநோக்கி கருவிகளை பயன்படுத்தி, வெகு துாரத்தில் தீப்பற்றினாலும் உடனே கண்டறிய முடியும்.

வனத்துறையினர் கூறியதாவது:

மரங்களில் பரண் அமைத்து, வனத்தில் தீ கண்காணிப்பு பணிகளை மேற்கொள்கிறோம். இதன் மூலம், வனப்பகுதியில் தீ ஏற்பட்டால், எளிதாக அறிந்து, அந்த இடத்திற்கு விரைந்து சென்று கட்டுப்படுத்த முடியும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us