sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 15, 2025 ,கார்த்திகை 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

ரயில் நிலையத்தில் தேக்கு மர கட்டைகள் அகற்றம்; மீண்டும் பயன்படுத்த வலியுறுத்தல்

/

ரயில் நிலையத்தில் தேக்கு மர கட்டைகள் அகற்றம்; மீண்டும் பயன்படுத்த வலியுறுத்தல்

ரயில் நிலையத்தில் தேக்கு மர கட்டைகள் அகற்றம்; மீண்டும் பயன்படுத்த வலியுறுத்தல்

ரயில் நிலையத்தில் தேக்கு மர கட்டைகள் அகற்றம்; மீண்டும் பயன்படுத்த வலியுறுத்தல்


ADDED : பிப் 25, 2024 10:58 PM

Google News

ADDED : பிப் 25, 2024 10:58 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குன்னுார்;'குன்னுார் மலை ரயில் நிலையத்தில் அகற்றப்பட்ட தேக்கு மர சாரங்களை மீண்டும் பயன்படுத்த வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் நுாற்றாண்டு பழமை வாய்ந்த, குன்னுார் மலை ரயில் நிலையம் 'அம்ரித் பாரத்' திட்டத்தின் கீழ், 6.7 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்டு வருகிறது.

நீண்ட கால தொலைநோக்கு பார்வையுடன் பன்முக தன்மையில் மகத்துவத்தை வெளிப்படுத்தும் விதமாக செயல்படுத்தும் இத்திட்ட பணிகளை, பாரம்பரியம் மாறாமல் செயல்படுத்த மத்திய ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது.

இத்திட்டத்தில் தற்போது, ரயில் நிலைய கூரை அகற்றப்பட்டு, 16 அடி நீளமுள்ள, 50க்கும் மேற்பட்ட தேக்கு மரகட்டைகள்அகற்றப்பட்டுள்ளது. இங்கு, இரும்பு கம்பிகள் பதிக்கப்படுகிறது.

மலை ரயில் ரத அறக்கட்டளை நிறுவன தலைவர் நடராஜன் கூறுகையில், '' நாடு முழுவதும் அம்ரித் பாரத் திட்ட பணிகள் பாரம்பரியம் மாறாமல் புதுப்பிப்பது தொடர்பாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

குன்னுார் ரயில் நிலைய கூரையில் இருந்து அகற்றப்பட்ட தேக்கு மரங்கள் தற்போதும் எந்த பாதிப்பும் இல்லாமல் நல்ல நிலையில் உள்ளது. இதனை மீண்டும் அதே இடங்களில் பயன்படுத்த வேண்டும்,'' என்றார்.






      Dinamalar
      Follow us