/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மரங்கள் இல்லாத மைதானம்: வெயிலில் வாடும் மாணவர்கள்
/
மரங்கள் இல்லாத மைதானம்: வெயிலில் வாடும் மாணவர்கள்
ADDED : பிப் 28, 2024 12:21 AM

பந்தலுார்:பந்தலுார் அருகே, அம்பலமூலா பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி இடைநின்ற மாணவர்களுக்கான சிறப்பு பள்ளிகள் செயல்பட்டு வருகிறது.
இரண்டு பள்ளிகளின் முன்பாக, பெரிய அளவிலான விளையாட்டு மைதானம் அமைந்துள்ளது. மைதானத்தை சுற்றி மரங்கள் இல்லாததால், கடுமையான வெயிலில் மாணவர்கள் விளையாடும் போது, வெயிலில் வாடி சிரமப்படுகின்றனர்.
மேலும், பள்ளியின் முன்பகுதியில் மரங்கள் இல்லாததால், வகுப்பறைக்குள் கடும் வெப்பம் நிலவுகிறது.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய பொதுச் செயலாளர் சிவசுப்ரமணியம் கூறுகையில்,''பள்ளியில், 5- மாணவர்களுக்கு ஒரு மரம் என்று ஒப்படைத்து, நல்ல நிழல் தரும், உள்ளூர் மரக்கன்றுகள் நடவு செய்து, அதன் முன்பாக அந்த மாணவர்களின் பெயரை எழுதி வைத்தால், மரம் வளர்ப்பில் மாணவர்கள் ஆர்வம் காட்டுவதுடன், பள்ளி வளாகமும் பசுமையாக மாறும்,'' என்றார்.

