sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

நடவு செய்யாத மரக்கன்றுகள்: கருகி அழியும் அபாயம்

/

நடவு செய்யாத மரக்கன்றுகள்: கருகி அழியும் அபாயம்

நடவு செய்யாத மரக்கன்றுகள்: கருகி அழியும் அபாயம்

நடவு செய்யாத மரக்கன்றுகள்: கருகி அழியும் அபாயம்


ADDED : ஏப் 01, 2024 12:26 AM

Google News

ADDED : ஏப் 01, 2024 12:26 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பந்தலுார்;பந்தலுார் அருகே கப்பாலா, பழங்குடியினர் கூட்டுறவு சங்க தேயிலை தோட்டத்தில், வனத்துறை மூலம் வழங்கப்பட்ட மரக்கன்றுகள் நடவு செய்யாமல் கருகி காய்ந்து வருகிறது.

மரம் வளர்ப்பை ஊக்குவிக்கும் வகையில் வனத்துறை மூலம், ஒவ்வொரு பகுதிகளும் மரக்கன்றுகள் நடவு செய்ய தொடர்ச்சியாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

அதில், தனியார் தேயிலை தோட்டங்களில், விவசாயிகளுக்கு மரக்கன்று வழங்கி அவர்கள் மூலம் நடவு செய்து பராமரிக்கப்பட்டு வருகிறது.

வனப்பகுதிகள் மற்றும் சாலை ஓரங்களில் நடவு செய்யப்படும் மரக்கன்றுகள், கோடை காலங்களில் காட்டுத் தீயில் கருகி காணாமல் போய்விடுகிறது.

இந்நிலையில், பந்தலுார் அருகே கப்பாலா பகுதியில் செயல்படும், பழங்குடியினர் கூட்டுறவு சங்க தேயிலை தோட்டத்தில் நடவு செய்வதற்காக, வனத்துறை மூலம் கொண்டு வந்து வைக்கப்பட்ட மரக்கன்றுகள், நடவு செய்யாமலே காய்ந்து கருகி வருகிறது.

மரக்கன்றுகளை வளர்ப்பதற்காக ஊக்குவிக்க வேண்டிய நிலையில், மரக்கன்றுகள் காய்ந்து கருகி வருவது குறித்து வனத்துறை கண்டு கொள்ளாதது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.






      Dinamalar
      Follow us