ADDED : ஏப் 23, 2024 10:29 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெ.நா.பாளையம் : சிறுமுகை, பெத்திக்குட்டையை சேர்ந்தவர் நந்தகுமார், 30. ஒன்னிபாளையம் ரோடு, கருப்பராயன் கோவில் அருகே சென்றபோது, அந்த வழியாக வந்த இருவர் நந்தகுமாரிடமிருந்த மொபைல் போனை பறித்துச் சென்றனர்.
பெரியநாயக்கன்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து நடத்திய விசாரணையில், கோவை பாப்பநாயக்கன்பாளையத்தை சேர்ந்த தினேஷ், 24, புலியகுளத்தைச் சேர்ந்த கோகுல், 24, ஆகியோர் மொபைல் போனை பறித்து சென்றது தெரியவந்தது. போலீசார் இருவரையும் கைது செய்தனர்.

