sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து மண்டல அலுவலர்களுக்கு பயிற்சி

/

தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து மண்டல அலுவலர்களுக்கு பயிற்சி

தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து மண்டல அலுவலர்களுக்கு பயிற்சி

தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து மண்டல அலுவலர்களுக்கு பயிற்சி


ADDED : மார் 22, 2024 10:02 PM

Google News

ADDED : மார் 22, 2024 10:02 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊட்டி:நீலகிரி தொகுதியில் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்த மண்டல அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

அதில், லோக்சபா தேர்தலை முன்னிட்டு, ஒவ்வொரு ஓட்டு சாவடி மையத்திலும், மேற்கொள்ள வேண்டிய அடிப்படை வசதிகள் குறித்து, கள ஆய்வு செய்து, துறை அலுவலர்களுக்கு தெரிவித்து, பணியை விரைவில் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதில், மண்டல அலுவலர்கள், மாற்றுப் பாதையின் வரைப்படத்தை தயாராக வைப்பதுடன், பதட்டமான வாக்கு சாவடி மையங்களை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். இதனை, அனைத்து உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும்.

தொடர்ந்து, மண்டல அலுவலர்களுக்கு ஓட்டு பதிவு, ஓட்டு கட்டுப்பாட்டு இயந்திரம் மற்றும் 'விவிபேட்' இயந்திரங்கள் குறித்து செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. இளம் வாக்காளர்களுக்கு இடையே, வாக்களிப்பதன் அவசியம் குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்த ஆலோசிக்கப்பட்டது.

மேலும், பேரூராட்சி, நகராட்சி மற்றும் ஊராட்சி பகுதிகளில்,100 சதவீதம் ஓட்டு பதிவை வலியுறுத்தி, மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் கலை நிகழ்ச்சி, மராத்தான் போட்டி, மரக்கன்று நடவு, மனித சங்கிலி, கை எழுத்து இயக்கம் மற்றும் 'செல்பி பாயின்ட்' உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வது என முடிவு எடுக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us