/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பூங்காவில் திரண்ட சுற்றுலா பயணியர்
/
பூங்காவில் திரண்ட சுற்றுலா பயணியர்
ADDED : ஏப் 14, 2024 01:02 AM

ஊட்டி;ஊட்டி அரசு தாவர வியல் பூங்கா, படகு இல்லம், ரோஜா பூங்கா மற்றும் மாவட்டத்தில் பிற சுற்றுலா ஸ்தலங்களில் ரம்ஜான் மற்றும் வார விடுமுறையை ஒட்டி சுற்றுலா பயணியர் திரண்டனர்.
ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவிற்கு, கடந்த, 11ம் தேதியிலிருந்து, 13ம் தேதி வரை, 50 ஆயிரம் சுற்றுலா பயணியர் வருகை தந்தனர். பூங்காவில் உள்ள பிரதான புல்தரை மைதானத்தில் குடும்பத்தாருடன் ஆடி, பாடி மகிழ்ந்தனர்.
படகு இல்லத்தில் சுற்றுலா பயணியர் கூட்டம் அதிகரிப்பால் நீண்ட வரிசையில் காத் திருந்து படகு சவாரி செய்தனர். ஊட்டிக்கு சுற்றுலா வாகனங்களில் எண்ணிக்கை அதிகரித்ததால் நகரில் ஆங்காங்கே போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டது. சுற்றுலா பயணியர் குறிப்பிட்ட நேரத்திற்கு செல்ல முடியாமல் தவித்தனர்.
சுற்றுலா பயணியர் வருகையால் விடுதிகள், காட்டேஜ்கள் நிரம்பியது.

