sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுப்பு இன்று துவங்கி மூன்று நாட்கள் நடக்கிறது

/

ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுப்பு இன்று துவங்கி மூன்று நாட்கள் நடக்கிறது

ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுப்பு இன்று துவங்கி மூன்று நாட்கள் நடக்கிறது

ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுப்பு இன்று துவங்கி மூன்று நாட்கள் நடக்கிறது


ADDED : மே 23, 2024 05:03 AM

Google News

ADDED : மே 23, 2024 05:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலுார்: தமிழகம் உள்ளிட்ட தென்னிந்திய அளவிலான யானைகள் கணக்கெடுப்பு பணி இன்று துவங்கி, மூன்று நாட்கள் நடக்கிறது.

தமிழக வனக்கோட்டங்களில், ஆண்டுக்கு ஒரு முறையும், முதுமலை உள்ளிட்ட புலிகள் காப்பகங்களில், ஒவ்வொறு ஆண்டும் பருவமழைக்கும் முந்தைய மற்றும் பிந்தைய வனவிலங்கு கணக்கெடுப்பு பணி நடந்து வருகிறது. ஆண்டுக்கு ஒரு முறை தானியங்கி கேமராக்கள் பயன்படுத்தி புலிகள் கணக்கெடுப்பு பணிகள் நடந்து வருகிறது.

அதேபோன்று தற்போது ஆண்டுக்கு ஒருமுறை, தென்னிந்திய அளவிலான யானைகள் கணக்கெடுக்கும் நடந்து வருகிறது.

நடப்பாண்டு, தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்கள் உட்பட்ட வனப்பகுதிகளில், ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுப்பு பணிகள் இன்று துவங்கி மூன்று நாட்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

கணக்கெடுப்பு பணிகள், நேர்கோடு முறையில், நீர்நிலைகள் கண்காணிப்பு மற்றும் கால் தடம், எச்சம் ஆகிய முறைகளில் நடக்கிறது.

இந்நிலையில், முதுமலை புலிகள் காப்பக வன ஊழியர்களுக்கு தெப்பக்காடு யானைகள் முகாமிலும்; மசினகுடி கோட்ட வன ஊழியர்களுக்கு சீகூர் வனச்சரகர் அலுவலகத்திலும் நேற்று பயிற்சி முகாம் நடந்தது. அதில், வன ஊழியர்கள் வேட்டை தடுப்பு காவலர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us