sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

ஓட்டு எண்ணும் நாளில் மேற்கொள்ள வேண்டிய பணிகள்

/

ஓட்டு எண்ணும் நாளில் மேற்கொள்ள வேண்டிய பணிகள்

ஓட்டு எண்ணும் நாளில் மேற்கொள்ள வேண்டிய பணிகள்

ஓட்டு எண்ணும் நாளில் மேற்கொள்ள வேண்டிய பணிகள்


ADDED : மே 26, 2024 11:22 PM

Google News

ADDED : மே 26, 2024 11:22 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊட்டி;ஊட்டியில் ஓட்டு எண்ணும் நாளில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் தொடர்பாக அலுவலர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

அதில், மாவட்ட கலெக்டர் கூறியதாவது:

லோக்சபா தேர்தலில் பதிவான, ஆறு சட்டசபை தொகுதிகளின் ஓட்டு பெட்டிகள், ஊட்டி அரசு பாலிடெக்னிக் கல்லுாரியில் வைக்கப்பட்டு, போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பதிவான ஓட்டுகள் வரும், 4ம் தேதி, காலை, 8:00 மணிக்கு எண்ணப்படுகிறது.

இதனை முன்னிட்டு, காவல்துறை மூலம், உரிய பாதுகாப்பு, நகராட்சி மூலம், குடிநீர், கழிப்பிட வசதிகள், சுகாதாரத் துறையின் மூலம், 108 ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்த வேண்டும். மேலும், தீயணைப்பு துறை சார்பில், தீ தடுப்பு வாகனத்துடன், போதிய பணியாளர்கள் அங்கு பணியமர்த்த வேண்டும்.

மின்சார துறை மூலம், தடையில்லா மின்சார வசதி, பொதுப்பணித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில், மேற்கொள்ள வேண்டிய பணிகள், தேர்தல் தொடர்பான அனைத்து பணிகளை ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு, அவர் கூறினார்.

அதில், அனைத்து அரசு துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us