sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஜனவரி 01, 2026 ,மார்கழி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

குவிந்த 10 டன் கழிவு அகற்றிய துாய்மை பணியாளர்கள்

/

குவிந்த 10 டன் கழிவு அகற்றிய துாய்மை பணியாளர்கள்

குவிந்த 10 டன் கழிவு அகற்றிய துாய்மை பணியாளர்கள்

குவிந்த 10 டன் கழிவு அகற்றிய துாய்மை பணியாளர்கள்


ADDED : ஏப் 19, 2024 10:57 PM

Google News

ADDED : ஏப் 19, 2024 10:57 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊட்டி:ஊட்டியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. ஆண்டு தோறும் ஏப்., மாதம் தேர் திருவிழா வெகு விமரிசையாக நடக்கிறது. நடப்பாண்டு தேர்திருவிழா இரண்டு நாட்களுக்கு முன்பு நடந்தது.

தேர் திருவிழாவுக்கு உள்ளூர் மக்கள் மட்டுமின்றி, வெளியிடங்களிலிருந்து ஏராளமானோர் வருகை தந்தனர். திருவிழாவை ஒட்டி, வெளிமாவட்டம், வெளிமாநிலத்திலிருந்து ஏராளமான வியாபாரிகள் நடைப்பாதையில் கடை அமைத்து வியாபாரம் செய்தனர். இதனால், மாரியம்மன் கோவில் வளாகம், ஐந்துலாந்தர், மெயின்பஜார், மார்க்கெட் பகுதிகளில் மக்கள் கூட்டம் அதிகரித்தது.

மக்கள் பயன்படுத்தும் கழிவு பொருட்கள் ஆங்காங்கே வீசி சென்றதால், 10 டன் அளவுக்கு குப்பை கழிவுகள் தேங்கியது. நகராட்சி கமிஷனர் ஏகராஜ் உத்தரவின் பேரில், நகராட்சி சுகாதார அலுவலர் ஸ்ரீதரன் தலைமையில், 50 க்கு மேற்பட்ட சுகாதார பணியாளர்கள் மறுநாள் அதிகாலையில் வந்து, 10:00 மணிக்குள் குப்பைகளை முழுமையாக அகற்றி சுத்தம் செய்தனர்.

இவர்களுக்கு உள்ளூர் மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us