/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
3 மாதமாக போக்கு காட்டும் சிறுத்தை
/
3 மாதமாக போக்கு காட்டும் சிறுத்தை
ADDED : மே 23, 2024 01:38 AM
மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையம் அடுத்த வெள்ளிப்பாளையம் அருகில் சென்னாமலை கரட்டில் கடந்த மார்ச் 1ம் தேதி கன்றுக்குட்டியை சிறுத்தை தாக்கி கொன்றது.
இதையடுத்து, அப்பகுதியில் சிறுத்தையை பிடிக்க சிறுமுகை வனத்துறை சார்பில் கூண்டு வைக்கப்பட்டது. அதில் சிறுத்தை சிக்காததால், அருகில் வேறு ஒரு இடத்தில் கூண்டு இடமாற்றம் செய்து வைக்கப்பட்டது. மூன்று மாதம் காலம், ஆகியும் கூண்டில் சிறுத்தை சிக்காமல் வனத்துறையினருக்கு போக்கு காட்டி வருகிறது.
இதுகுறித்து சிறுமுகை வனத்துறையினர் கூறுகையில், ''கூண்டிற்கு அருகில் மற்றும் அதன் சுற்றியுள்ள பல்வேறு இடங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு சிறுத்தை நடமாட்டம் குறித்து கண்காணித்து வருகிறோம்.
இதுவரை சிறுத்தை சிக்காததால், சிறுத்தை இடம் பெயர்ந்து வேறு இடத்திற்கு சென்றிருக்க வாய்ப்புள்ளது. மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை, என்றனர்.

