/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சமரச விழிப்புணர்வு நிகழ்ச்சி; நீதிபதிகள் பங்கேற்பு
/
சமரச விழிப்புணர்வு நிகழ்ச்சி; நீதிபதிகள் பங்கேற்பு
சமரச விழிப்புணர்வு நிகழ்ச்சி; நீதிபதிகள் பங்கேற்பு
சமரச விழிப்புணர்வு நிகழ்ச்சி; நீதிபதிகள் பங்கேற்பு
UPDATED : ஏப் 11, 2024 07:51 AM
ADDED : ஏப் 11, 2024 07:13 AM

ஊட்டி : ஊட்டி பஸ் ஸ்டாண்டில் சமரச விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
மாநில முழுவதும் உள்ள கோர்ட்களில் சமரச மையம் செயல்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, ஊட்டி பஸ் ஸ்டாண்டில் நீதிபதி ஸ்ரீதரன் விழிப்புணர்வு நிகழ்ச்சியை துவக்கி வைத்து ஆட்டோக்களில் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை மக்கள்; பஸ் பயணிகளிடம் வழங்கினார்.
அதில், 'நிலுவையில் உள்ள வழக்குகளை நேரடியாக அல்லது வக்கீல்கள் மூலமாக சமரச மையத்திற்கு அனுப்பலாம். அனைத்து மையங்களில் உள்ள பயிற்சி பெற்ற சமரசர்கள், சமரசம் பேச்சுவார்த்தைக்கு ஏதுவாக உங்களை வழிநடத்துவர்.
இச்செயல்பாடுகள் உங்கள் வழக்கை எந்த வகையிலும் பாதிக்காது. சமரசம் ஏற்படவில்லை என்றால் நீங்கள் உங்கள் வழக்கை கோர்ட்டில் தொடரலாம்.
சமரச மையத்தில் காணப்படும் தீர்வு இறுதியானது இதற்கு மேல் முறையீடு கிடையாது,' என்ற விழிப்புணர்வு வாசகங்கள் உள்ளன. இந்த நிகழ்ச்சியில், நீதிபதிகள்; வக்கீல்கள் பலர் பங்கேற்றனர்.

