sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 15, 2025 ,கார்த்திகை 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

குன்னுாரில் புஷ்ப பல்லக்கு ஊர்வலம் :அலகு குத்தி பக்தர்கள் நேர்த்தி கடன்

/

குன்னுாரில் புஷ்ப பல்லக்கு ஊர்வலம் :அலகு குத்தி பக்தர்கள் நேர்த்தி கடன்

குன்னுாரில் புஷ்ப பல்லக்கு ஊர்வலம் :அலகு குத்தி பக்தர்கள் நேர்த்தி கடன்

குன்னுாரில் புஷ்ப பல்லக்கு ஊர்வலம் :அலகு குத்தி பக்தர்கள் நேர்த்தி கடன்


ADDED : ஏப் 22, 2024 01:30 AM

Google News

ADDED : ஏப் 22, 2024 01:30 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குன்னுார்;குன்னுார் நகராட்சி சார்பில் நடந்த புஷ்ப பல்லக்கு உற்சவத்தில், பக்தர்கள் அலகு குத்தி நேர்த்திகடன் செலுத்தினர்.

குன்னுார் தந்தி மாரியம்மன் கோவிலில் சித்திரை தேர் திருவிழா கடந்த, 5ம் தேதி துவங்கி நடந்து வருகிறது. திருவிழாவில், குன்னுார் நகராட்சியின், 62வது ஆண்டு புஷ்ப பல்லக்கு உற்சவம் நடந்தது.

கிருஷ்ணாபுரத்தில் இருந்து துவங்கிய அபிஷேக பொருட்கள் ஊர்வலத்தில் பேண்ட் இசை முழங்க, ஆடல், பாடல்களுடன் பக்தர்கள் தந்தி மாரியம்மன் கோவிலுக்கு வந்தனர். அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது.

ஊர்வலத்தில் நகராட்சி ஊழியர் ரங்கராஜ், முதுகில், அலகு குத்தி, அதில், இளநீர் காய்களை இழுத்து வந்தார். இதே போல, முகத்தில் வேல் சூலாயுதம் அலகு குத்தியும், தீச்சட்டியை ஏந்தியும் பக்தர்கள் வந்தது பரவசப்படுத்தியது.

தொடர்ந்து மதியம் அம்மன் திருவீதி உலா நடந்தது. அன்னதானம், வான வேடிக்கை, இன்னிசை நிகழ்ச்சி உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது. ஏற்பாடுகளை நகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள், துாய்மை பணியாளர்கள் செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us