/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பறக்கும் படை சோதனையில் ரூ. 1.20 லட்சம் பறிமுதல்
/
பறக்கும் படை சோதனையில் ரூ. 1.20 லட்சம் பறிமுதல்
ADDED : மார் 28, 2024 05:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேட்டுப்பாளையம், : மேட்டுப்பாளையத்தில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வரப்பட்ட ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகை சாலையில் ஆலாங்கொம்பு பகுதியில் நேற்று பறக்கும் படையினர் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனையிட்டனர்.
இதில் செந்தில்குமார் என்பவர் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து, மேட்டுப்பாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.---

