sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

குந்தா மின் வட்டத்தில்மின் கோபுர பணி

/

குந்தா மின் வட்டத்தில்மின் கோபுர பணி

குந்தா மின் வட்டத்தில்மின் கோபுர பணி

குந்தா மின் வட்டத்தில்மின் கோபுர பணி


ADDED : ஏப் 29, 2024 01:30 AM

Google News

ADDED : ஏப் 29, 2024 01:30 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊட்டி;குந்தா மின் வட்டத்தில் ராட்சத மின் கோபுரம் அமைக்கும் பணிக்காக மின் உதிரி பாகங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.

நீலகிரி மாவட்டம், குந்தா வட்டத்திற்கு உட்பட்ட எமரால்டு வேலி அருகே, 1800 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 4 பிரிவுகளின் கீழ், தலா, 125 மெகாவாட் வீதம், 500 மெகாவாட் மின் உற்பத்திக்கான குந்தா நீரேற்று மின் நிலையத்திற்கான கட்டுமான பணிகள், சில ஆண்டுகளுக்கு முன் துவக்கப்பட்டது.

கடந்த, 2013 ம் ஆண்டு அறிவிக்கப்பட்ட இந்த திட்டம், 11 ஆண்டுகள் கடந்த நிலையில் பல்வேறு காரணங்களால் இன்னும் முடியாமல் உள்ளது.

முதற்கட்டமாக சுரங்க பாதை அமைக்கும் பணி, 70 சதவீதம் நிறைவு பெற்றுள்ளது. பிற கட்டுமான பணிகளும் நடந்து வருகிறது. முதல் பிரிவுக்கான, 125 மெகாவாட் பணி முடியும் தருவாயில் உள்ளது.

இந்நிலையில், குந்தா நீரேற்று மின்நிலையத்திலிருந்து, மேட்டுப்பாளையம், கோவை, ஈரோடு பகுதிகளுக்கு மின்சாரம் கொண்டு செல்ல, 10 க்கும் மேற்பட்ட இடங்களில் ராட்சத மின் கோபுரம் அமைக்கும் பணி ஆங்காங்கே நடந்து வருகிறது.

இதற்காக மின் உதிரி பாகங்கள், மின் கம்பிகளை கொண்டு வந்து எமரால்டு பகுதியில் குவித்து வைக்கப்பட்டுள்ளது.

மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில்,'குந்தா நீரேற்று மின்திட்ட பணிகள் முழு வீழ்ச்சில் நடந்து வருகிறது. மின் நிலையத்திலிருந்து மின்சாரம் செல்லும் பாதையில் ராட்சத மின்கோபுரங்கள் அமைக்க தேவையான உதிரி பாகங்கள் கொண்டுவரப்பட்டு பணிகள் நடந்து வருகிறது,' என்றனர்.






      Dinamalar
      Follow us