sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

யானைகள் வழித்தட வரைவு அறிக்கை: கூடலுாரில் கருப்பு கொடி கட்டி எதிர்ப்பு

/

யானைகள் வழித்தட வரைவு அறிக்கை: கூடலுாரில் கருப்பு கொடி கட்டி எதிர்ப்பு

யானைகள் வழித்தட வரைவு அறிக்கை: கூடலுாரில் கருப்பு கொடி கட்டி எதிர்ப்பு

யானைகள் வழித்தட வரைவு அறிக்கை: கூடலுாரில் கருப்பு கொடி கட்டி எதிர்ப்பு


ADDED : மே 13, 2024 11:50 PM

Google News

ADDED : மே 13, 2024 11:50 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலுார்:கூடலுார் மக்களை பாதிக்கும், யானைகள் வழித்தட வரைவு அறிக்கையை ரத்து செய்ய வலியுறுத்தி, வீடு, கடைகளில் கருப்பு கொடி கட்டி போராட்டத்தை துவங்கி உள்ளனர்.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும், மனித- யானை மோதல் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இதனை தவிர்க்க, தமிழக அரசு சார்பில் யானைகள் வாழ்விடங்களை பாதுகாக்கும் வகையில், மாநில வனத்துறையின் சிறப்பு குழு சார்பில், 42 யானை வழித்தடங்கள் கண்டறியப்பட்டு, யானைகள் வழித்தட வரைவு அறிக்கை தயாரித்துள்ளது.

'இது குறித்து பொதுமக்கள் இணையதளம் வாயிலாக ஆலோசனை கருத்துக்களை தெரிவிக்கலாம்,' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில், கூடலுாரில் குறிப்பிட்டுள்ள மூன்று யானை வழித்தடங்களில், பெரும்பாலான பகுதி மக்கள் வாழ்விடங்களுக்குள் வருவதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனால், வரைவு அறிக்கையை ரத்து செய்ய, அனைத்து தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், அரசியல் கட்சியினர், தன்னார்வலர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் கூடலுார் எம்.எல்.ஏ., பொன் ஜெயசீலன் தலைமையில் நடந்தது.

கூட்டத்தில், வரைவு அறிக்கையை ரத்து செய்ய வலியுறுத்தி, 'வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் கருப்பு கொடி கட்டுவது,' என, முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, கூடலுார், ஓவேலி, மசினகுடி, ஸ்ரீமதுரை உள்ளிட்ட பல பகுதிகளில் வீடுகள் மற்றும் கடைகள் முன் நேற்று முதல் கருப்பு கொடி கட்டி, திட்டத்தை ரத்து செய்ய மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.






      Dinamalar
      Follow us