sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

காற்றில் சாய்ந்த வாழை மரங்கள்; நஷ்டத்தில் சிறு விவசாயிகள்

/

காற்றில் சாய்ந்த வாழை மரங்கள்; நஷ்டத்தில் சிறு விவசாயிகள்

காற்றில் சாய்ந்த வாழை மரங்கள்; நஷ்டத்தில் சிறு விவசாயிகள்

காற்றில் சாய்ந்த வாழை மரங்கள்; நஷ்டத்தில் சிறு விவசாயிகள்


ADDED : ஜூன் 20, 2024 05:05 AM

Google News

ADDED : ஜூன் 20, 2024 05:05 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலுார்: கூடலுார் அருகே, ஒரு மாதத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த நேந்திரன் வாழை மரங்கள் காற்றில் சாய்ந்ததால் விவசாயிகள் நஷ்டம் அடைந்துள்ளனர்.

கூடலுார் பகுதியில் நேற்று முன்தினம் இரவு பலத்த காற்றுடன் மழை பெய்தது. பல இடங்களில் சாலை மற்றும் விவசாய நிலங்களில் மழை வெள்ளம் புகுந்து பாதிக்கப்பட்டது. மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.

கோத்தர்வயல் உள்ளிட்ட பல பகுதியில் வீசிய பலத்த காற்றில், ஒரு மாதத்தில் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த நுாற்றுக்கும் மேற்பட்ட நேந்திரன் வாழை மரங்கள் சாய்ந்தன. இதனால், ஏற்பட்ட நஷ்டத்தை ஈடு செய்ய முடியாமல் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

விவசாயிகள் கூறுகையில், 'கூடலுார் பகுதியில் காட்டு யானைகளிடம் இருந்து நேந்திரன் வாழை காப்பாற்றி அறுவடை செய்வது பெரும் போராட்டமாக உள்ளது. தொடர்ந்து, விலை வீழ்ச்சி அடைந்த நிலையில் தற்போது ஓரளவு விலை கிடைத்து வருகிறது. இந்நிலையில், அறுவடைக்கு தயாராக இருந்த நேந்திரன் வாழைமரம் காற்றில் சாய்ந்ததால் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனை ஈடு செய்ய அரசு நிவாரணம் வழங்க வேண்டும்,' என்றனர்.






      Dinamalar
      Follow us